இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணம் போல் வாழ்க்கை

படம்
தமிழ் இலக்கிய பரப்பில் தன்வரலாற்று எழுகைக்கான வரலாறு நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. பாரதிதான் மரபை தமிழில் தொடங்கி வைத்தான் என்பதற்கான சான்றுகளும் உண்டு. அதிலும் ஈழச் சூழலில் தன்வரலாற்று எழுதுகைகள் போர்க் காலத்திலும் போரின் பின்னரான காலத்திலும் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது .ஒருதலைச் சார்பு இருந்தாலும் காலச்சூழலில் செயலாற்றுகைகளையும் அறிய தன்வரலாற்று நூல்கள் பெரிதும் பயன்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிடப் வெளியிடப்பட்ட நிவேதா சிவராஜாவின் "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற நூல் ஓரளவு தன் வரலாற்றை கூற முயன்று இருப்பதை காணலாம் .இந்த நூல் என்னளவில் இருவகைகளில் கணிப்பு பெறுகிறது         1. ஒரு சமூக அமைப்பு ஒன்றின் குறித்த கால செயற்பாடுகளை எழுத்துருவாக்கம் செய்திருக்கின்றது         2. சமூகப் பணிகளில் இளையவர்கள் குறிப்பாக பெண்கள் முன் வருகையின் தேவையினை உணர்த்தி நிற்கிறது எண்ணம் போல் வாழ்க்கை மனிதம் என்கின்ற  அமைப்பொன்றில் நிவேதிதாவின் இணைவு அந்த அமைப்பின் செயலாற்றுகை என்பவற்றை மீட்டிப் பார்த்து கதை சொல்லுதல் பாங்கோடு எழுத்து உருவாக்கியிருக்கிறா...

விண்ணதிர்பரணி

படம்
 " என்னையும் இணைத்துக் கொண்ட ஒட்டுமொத்த சமூகத்தின் வலி தீர்ப்பாக எனது கவிதைகளை நான் எழுதுகிறேன் இங்கே என்னுடைய குரலை சமூகத்தின் குரலாகவும் கொள்ளப்படுகிறது"  புதுவை இரத்தினதுரை டிலோயினி மோசஸின் கவிதைத் தொகுப்பாக விண்ணதிர் பரணி அண்மையில் வெளிவந்திருக்கின்றது .கவிஞர் தன் சூழல், வாழ்வியல் என்பவற்றை பெரும்பாலும் தன்நிலை கூற்று நிலையில் கவிதைளாகப் படைத்திருக்கிறார்.ஈழத்தின் உடைய இலக்கியச்செல்நெறி  ஒரு காலத்தின் பின் போர் அவலங்களை பாடுவதில் மையம் கொள்கிறது .டிலோயினியின் பெரும்பாலான கவிதைகளும் அதே தளத்தில்தான் எழுதப்பட்டிருக்கின்றது .போரின் பின்னரான சமூகம் இன்னொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் கைதிகளின் விடுதலை, நில அபகரிப்பு ,நல்லிணக்க முயற்சிகள் தோல்வியுறல் போன்ற சமூகச் சிக்கல்களும் கவிதை கருவாக விரிந்திருக்கிறது .ஆத்மாவின் ஆதங்கம் என்ற கவிதையில்              "சுடலையில் தான்வேக             சிறைவைக்க அவர் போக            செல்வங்கள் இரண்டும்        ...

"அட்டை"

 அன்றொருநாளில் கூப்பன்  அட்டையில்லையென  அரிசி மறுக்கப்பட்டது  பசிந்திருந்தோம் பின்னொருநாளில் குடும்பக்காட்டில் அண்ணன் படமில்லையென அவனை இழுந்துச்சென்றனர் அதன் பின் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்  இன்றைக்கு கொவிட் காட் இல்லையென எனை  உட்செல்லவிடவில்லை  எங்கள் தேசத்தில் மனிதர்களைவிட காட் களுக்கு மதிப்பதிகம் 301121 2141

அருளற்ற கடவுளர்கள்

 எங்கள்  கடவுளர்க்கு அருள் உண்டா? அவலங்களை மட்டுமே தந்தெமை வஞ்சிக்கின்றன கனமழையும் கடும்பசியும்  காவுகொள்கின்றன எங்களூர் அரசியல்வாதிகளுக்கும் கடவுளர்க்கும் ஒப்பந்தமேதும் போலும் கேட்பதுவும் இரப்பதுவும்  நம்வேலை  மறப்பதுவும் மறைப்பதுவும் அவர்கள் வேலை தேர்தல் காலவாக்குறுதிகள் சர்ப்பத்தோலாய் கழன்று விடுகிறது புராணங்களில் படித்ததெவையும் நிகழக்காணோம் 'அரைசியல்  பிழைத்தோர்க்கு  அறம்கூற்றாகுமாம்' கூற்றாகிமட்டும்  நிற்கிறதிங்கே முன்னோர் பொழுதொன்றில் தேசத்தின் காவற்தெய்வங்கள் அகன்றன சூழ்கலி  அகலயாரை இரப்பது.. சாரங்கன்

முதுமையின் ப்ரியங்கள்

படம்
 ஆதிரா பிரிந்து விட்ட போதும்  நீயென் பிரியமுடையாள் பிரிவின் பின்னரான வாழ்வில் அப்படி உரைத்தல் ஆகாதாம் தோளோடு தழுவிய நிழல்களை  மிட்டல் குற்றம் என்கிறாள் இல்லாள் அதை மறுத்து சப்தமிட்டு உரைக்க  நானோ வீரமற்றவனாகிறேன் இன்றோ   கரம் கோர்த்த வீதியில் உன்னைப் போலொருத்தி கண்டேன் நினைவுகளில் அந்த இருக்கையும் ஆலமரத்தடியும் அணில் ஓடிய மதிலும் வந்தேனோ நின்றது நின்பால்யத்தை நினைத்தொரு பெருமூச்சிலாழ்ந்து நினைவுச் சகதிகளை நினைத்தேனை அழித்திட முயன்று தோற்று விடுகிறேன் விசுவாசிக்கிற அன்பினுள் தோய்தல்  முதுமையின் வரிகளில்  இயலாது போய்விடுகிறது பால்யத்தை மீட்டெடுக்க நரைகளை நிறமூட்டி சுருக்கங்களை மறைத்துக் கொள்கிறேன் சாரங்கன்

ஆல்

படம்
 காலா! நீ விதைத்தவை கடந்தும் கடத்தப்பட்டும் நிற்கிறதிங்கே விதைக்கப்பட்டவை அகழ்ந்தெடுக்கப்பட்டன மயிற்பீலிகளும் நறுஞ்சாந்துகளும் உமணர்கள்  கபளீரம் செய்தனர் வீழ்ந்தபட்டதால் நினைத்தலாகாதாம் அந்தோ ஓர் மாலை முடிவுற்ற போது நிர்கதியானோம் சிதைத்தவை தீர்த்தங்காரராய்  சேதி சொல்லும் நாள் தொலைதூரமில்லை * உமணர்கள்- உப்பு வியாபாரிகள்  சாரங்கன்  22/11/21

காமன் கூத்து

படம்
 கணனியில் பழைய கோப்புகளை தேடிக் கொண்டிருந்தபோது நினைவுகளோடு இந்த காணொளியும் கண்ணில் பட்டது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி சரசவிகம கிராமத்தில் இந்த காணொளியை எடுக்கப்பட்டது. தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த மலையக கிராமம். என் மலையக பயணங்களில் இங்குதான் இரட்டை லய வீடுகளை கண்டிருக்கிறேன். பிரமதாச வீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது இவ்வீடுகள் வழங்கப்பட்டதாய் அவ்வூர் முதியவர் சொன்ன ஞாபகம். ஒரு பங்குனி மாத மாலை நேரத்தில் ஹிந்தக்கல விடுதிக்கு சற்றுத் தொலைவில் உள்ள தையல் கடைக்குச் சென்றபோது எதேச்சையாக கடைக்கார அண்ணா எங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது இன்றைக்கு கூத்து இருக்கிறது வாருங்கள் என்று கேட்டார் ஓம்மென்று தலையாட்டி பயணப்படலாயிற்று.   யாழ்ப்பாணத்தில் ஊடகத்தில் பணியாற்றியபோது பல கூத்துக் கலைஞர்களை சந்தித்திருக்கிறேன் நேர்காணலும் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு கூத்தையும் எனும் நேரடியாய் பார்க்க வாய்ப்பு ஏற்படவில்லை கூத்துக்களுகளங்கள்  இன்று குறைந்து வருகிறது என்ற கவலையுடன் பலர் பேசுவதையும் கேட்டிருக்கிறேன். சரசவிகம கிராமத்திலே கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் கூத்து நிகழ...

கோட்டோவிய அழகியல்

படம்
 இன்றைக்கு ஆண்கள் தினம் என்ற செய்தி புலனத்தில் ஆங்காங்கே பதியப்பட்டிருந்தது. ஆண் தோழமைகளே  நமை வாழ்த்த யாரும் இல்லை என்ற அங்கலாய்புகளோடு பதிவுகளை இட்டிருந்தார்கள். ஒரு சில பெண் தோழமைகள் சற்று வித்தியாசமாய் தங்கள் சுவற்றில் பதிவுகளை இட்டிருந்தனர் . இயற்கையின் படைப்பில் பால்ரீதியான வகைப்பாடு இயல்பானது. ஆண்,பெண் என உடலியல் ரீதியான வகைப்பாட்டோடு மனரீதியான உணர்வுநிலைகளால் மாற்றுப்பாலினத்தாரும் தனி ஓர் பாலினத்திற்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.பால் ரீதியான தினங்களின் அரசியல்,கொண்டாடல் பின்புலம் என்ன. சமூகத்தில் அதற்கான தேவைப்பாடு என்ன என்பதற்கான கேள்விகள் எழல் இயல்பானதே. என் அவதானிப்பில் ஆண்கள் தினம் கொண்டாட்டப்பட்டதை கேள்விப்பட்டதில்லை.ஏன் அதை பலர் அறிந்த்திருப்பது கூட கிடையாது. மகளீர்  தின கொண்டாடுதல்களும் ,இலக்குகளும் வெளிச்சொல்லப்படுமளவிற்கு இத்தினம் கரிசனை பெறுவதில்லை.அண்மைக்கால சமூகவலைத்தள பரவலாக்கம் இத்தினம் பற்றிய நினைவூட்டல்களையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பால் சார் தினங்களின் தேவை எவ்வாறு எழுந்திருக்கும்.உரிமை,அடையாளம்சார் உறுதிப்படுத்தல்களின் தேவையே இவற்றை அங்கிகரி...

மீளத்திரும்பல்

படம்
 பிஞ்சொன்று விழிபிதுங்க தெருக்கடக்கின்றது  காலச்சுழல் மாற்றிவிட  அதற்கு இது புதிசு விட்டம் பார்த்து புரண்டெழும்பி பொழுதுபோக்கியதற்கு தெருவெளிகள் வெருட்சியாகிறது நேயச்சூழலினுள் அது இனி வயப்படும்  அகரம் வரைவோர் நினைவிலிருப்பர் உருண்டு பிரண்டு  குத்திமுறித்து  அலாப்பி தெளிந்து ஞானமடையும்  தெளிவடையிடையில் முடக்கங்களால் தடக்கங்கள் விளையும் திரைகளை காணததொன்று சாளரமோரம் தயங்கும் சாரங்கன்

வெளிகளில் ஒவியம்

படம்
 ஆதிரா சூன்யவெளியாய் நீள்கிறது  நினைவு வெளி கூடி குழைந்து காதோர கணகணப்பில்  லயித்து முத்தத்தில்  அந்தோ ப்ரியத்தில்  எல்லையில்லா  கணங்களின்  அந்த நிமிடங்கள்  இன்றேங்கே வெளிகளின் தேடலாய் நீ மொழிகளின் தேடலில்  நான்  அந்தோ  மூன்றாம் பிறை  வளரட்டும் தேயட்டும்  கதிர் சுடர் ஒளியாய் சுடரெளட்டும் நினைகுழையத்தில் நின்வாசம்கமகமகட்டும் அந்தோ தெருவோர மின்குமிழில் லயிருத்து யாசிக்கமறந்திருக்கும் அவன்போலொருவன் இங்கனமுளன் நீயுணர்  களைத்து லயித்து முகிழ்த்து மகிழ்த்தல் அந்தோ தொலைவில்லை சாரங்கன்

ஜெய்பீம்

படம்
  இன்றைக்கு ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து முடித்தாயிற்று. இன்றுவரை தமிழகச் சூழலில் அடக்கு முறைக்கு உட்பட்டு வரும் இருளர் பழங்குடி மக்களின் நீதிக்கான போராட்டத்தின் ஒரு துகள் திரையில் வந்திருக்கிறது. "நீதி என்பது அரசின் வன்முறை" என எங்கோ வாசித்த ஞாபகம் தொழில், தொழிலுக்கான இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் பழங்குடி மக்கள் பற்றிய பார்வை என நகரத் தொடங்கும் திரைக்கதை நீதி கோரல், வழக்குகளில் கட்டிப் போட தொடங்குகிறது. ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் தத்ரூபமாய் செதுக்கி இருக்கிறார் .இருளர் தமிழக பழங்குடியினர்கள் ஒரு இனக்குழுமம். Diffloth geravad   என்கின்ற அறிஞர் " இருளர் மொழி " எனும் நூலில் "இருளர் என்ற சொல் பல்வேறு சமூகக் கூறுகளை குறிக்கும் சொல்லாக   ,கேரளம் ,மைசூர் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது .ஆனைமலை பகுதியில் அட்டப்பாடியில் வாழும் இருளர் வட்ட இருளர் என அழைக்கப்படுகின்றனர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைநாடு அல்லது மேலைத்தேச இருளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்". என்கிறார் படம் முழுதும் இருளர் சமுதாய மக்கள் அரசு இயந்திரத்தால் ஒடுக்கப்படும் விதம் தேர்தல் ஜனநா...

நானும் சேகுவாராவும்

படம்
  கா.பொ.சாதாரணதரம் முடித்துவிட்டு விவாதம் எனகின்ற கனவுகளோடு சதா யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுத்திக்கொண்டிருந்தேன். அப்போது பாடசாலை நூலகம் இடம்மாறிக்கொண்டிருந்த்து. தற்போதைய சபாலிங்கம் மண்டபத்திற்கு கிழிருந்த அறையில் இருந்து பிரார்தனை மண்டபத்திற்கு முன்கட்டப்பட்ட மேல்மாடியில் நூலகம் ஒழுங்குபடுத்தும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சில புத்தகங்கள் கழிக்கப்பட்டு குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்கள்.அங்கே கண்டெடுத்த புத்தகம் ஒன்றின் மூலம் தான் சே நெருக்கமானார். என் எண்ணப்பாங்கு எல்லா நாட்டு கிளர்ச்சியாளர்களும் வென்றால்  புரட்சிவாதிகள் தோற்றால் ,வெல்லும் வரை தீவிரவாதிகள் .மொழியால் இனத்தால் வேறுபட்ட ஒருவனை உலகம் முழுதும் கொண்டாடுகிறார்கள் என்றால் அவனிடம் ஏதோ தத்துவ,கருத்தியல் செயல்தள ஈர்ப்பிருக்கிறது தானே. என்வாசிப்பனுவத்தில் சே ஓர் தத்துவியலாளராய் இல்லாது ஓர் செயற்பாட்டாளராகவே விளங்கினார். தத்துவ்வாதிகளை விட புரட்சியாளர்களின் பணிச்சுமை கூடியது. பொலிவிய கியூபக்காடுகள் என்று ஓர் தீயை விதைத்துச்சென்ற ஆளுமைதான் சே. சாகசப்பயணங்களோடு ஏனோ சேக்கு ஈர்ப்பு போலும்.ஈழத்தில் மருத்துவ...

தம்மபதமும் நானும்

படம்
மூன்று நான்கு மாதங்களுக்கு முன் விரிவுரை ஒன்றிலே தமிழ்பௌத்தம் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அந்த ஆர்வத்தில் பௌத்தம் பற்றி சிலதேடல்கள் விரிவடைந்த்தன. ஆரம்ப வகுப்புகளிலே மணிமேகலை பௌத்தகாவியம் என்றோர் குறிப்பொன்றோடு சுற்றித்திரிந்த நான் ஆர்வமிகுதியால் சிலவற்றை வாசிக்கத்தொடங்கினேன்.அதே சூழ்நிலையில் என்னைப்போலவே பௌத்ததை பற்றி பேசுகின்ற தோழமை ஒன்றும் வாய்க்கநேர்ந்த்து. அத்தோழமையோ சமகாலத்தில் ஓஷோவின் தம்மபத்தை வாசித்துக்கொண்டிருந்த்து. சிலவற்றை பகிரவும் மணிக்கணக்கில் கதைத்திடவும் தம்மபதம் பாலமாய் அமைந்த்து.இத்தேடலிலே பௌத்தமும் தமிழும்,தமிழ் இலக்கியங்களில் பௌத்தம்,இலங்கையில்சிங்களவர்கள், தம்மபதம்,பௌத்ததருமம் ,என்பன கண்ணில் பட்டது. இலக்கிய ரீதியான வரலாற்றுக்குறிப்புக்களோடு சில  பௌத்தவரலாற்றையும் அதன் சித்தாந்தங்களையும் பேசின. ஏனோ இதில் தம்மபதம் தனித்துவமாய் எனக்கு பட்டது. என் தம்மபதவாசிப்பென்பது எப்போதெல்லாம் நான் மனச்சிகலுக்குள் தவிர்க்கிறேனோ அப்போதெல்லாம் திரையை மேலே தட்டிவிட்டு வருகின்ற ஒரிரண்டு சுலோகங்களை வாசித்து  பகிர்வதோடு முடிந்துவிடுகிறது. பௌத்ததை மதமாய்  பார்க்காது ...

96ம் நானும்

படம்
 96 திரைப்படம் வந்து மூன்றாண்டுகள் என்கிறது புலனநினைவூட்டல்கள்.எனக்கும் இப்படத்திற்குமான தொடர்பை வைத்து தனிக்கதையே எழுதலாம். அப்போது நாங்கள் முதலாம் வருடம்.கிந்தகல விடுதி எங்கள் வசந்தமாளிகை.முதலாம் பருவபரீட்சைமுடிவுற்று இரண்டாம் பருவம் தொடங்கியிருந்த்து. சற்றே இச்சூழலும் பழக்கமாகிவிட்டது. அங்கே தான் இந்தப்படம் பார்த்த ஞாபகம். எந்தப்படம் வெளியானாலும் அதில் தரமான ஒலி ஒளியமைப்போடு இருக்கிறதை எப்படியும் ஒருவாரத்தினுள் தரவிறக்கிதரும் நண்பனொருவன் அறைபாடியாய் வாய்த்திருந்தான் . எங்கள் பல்கலைக்கழகபடவிநியோகஸ்தர்களில் முக்கியமானவன் அவன். அவன் மூலமாய் தான் இப்படமும் எமக்கு வந்த்து. சனிக்கிழமை துயில் எழுதல் நண்பகலை தொட்டுவிடுதும். இது ஆண்கள் விடுதிகளின் வழமை .சாப்பாடு அதன் பின் ஒரு திரைப்படம் வெளி உலாத்தல் என ஒரு நேரசூசி இருக்கும்.இப்படித்தான் 96 ம் பார்க்க நேர்ந்து படம் பார்க்க முதலே முன் பார்த்தவர்களின் அரசல்புரசலான கதைகளும் காதுகளை எட்டியிருந்த்து.படத்தை பார்த்துக்கொண்டிருக்கின்ற போது ஒருவனுக்கு கண்ணீர் வடிகிறது. இன்னொருவனோ குளியலறையில் போய் விம்மி அழுகிறான் அந்தளவு தூரம் திரையில் வருபவற்றை...

கோட்டான் தூது

படம்
 புரண்டு எழ மரணசேதிகள் முந்தாநாள் முச்சந்திக்கிழவன்  நேற்றோ  பரியாரி  நாளை ? கோட்டான்கள் கத்தியபோதெல்லாம்  சிரட்டை தட்டி துரத்திய அம்மாவை பரிகசித்த நான் ஒருசோடிகளை  தலைமாட்டில்    தூங்கியெழ சாக்காடு  விடியல்கள்  சாரங்கன்

ஏழிரண்டு

படம்
குறித்துக்கொள் என் ஊர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ஆயுதமேந்திய சிப்பாய்கள்  தெருச்சந்திகளில் காவலிருக்கிறார்கள் நிவாரணப்பொதிகளோடு வரும் கனவான்களே  அதை படமாக்கி இரவலரென பெயர் வாங்குமீன் வெறிச்சோடிய தெருக்களில்  நாய்களும் மாடுகளும்  கேட்பாரற்று அலைகிறது அவற்றை தனிமைப்படுத்த யாருளர் அலறிய தொலைபேசி  ஊரில் இன்னோர் இழவு வீழ்ந்த்தென்கிறது எரிக்காது கிடக்கின்ற நான்கோடு  இப்பிணமும் சேர்ந்து கொள்கிறது எரிப்பதற்கு பிறகு தேதிகுறிக்கப்படும் சிலவேளை ஒரு சிரங்கை  அஸ்தி  தரலாம் ஏழ் இரண்டின் நாள்பின் வெளி போக என்றார்கள் போய்க்கடைகளில் விலை கேட்கையில் ஈரிண்டாய் கூட்டப்பட்டு சொல்லப்படுகிறது

ஊழி

படம்
 கடத்தபட்டத்தாய் சான்றுகள் கிடந்தபோதும் மீட்கப்பட வாய்பேதும்  இல்லை சபரியும்  விபீடணனும் தானே  காணமல் ஆக்கப்பட்டனர் தாவிய தலையாட்டி பாசிசம் என கூவுகிறது  சாரங்கன்

அடகுதேசம்

படம்
 கருஞ்சாந்தை அப்பி வைத்திருக்கிறது மேகம் தெறித்து ஓய்ந்துவிடுகிறது கீற்றுக்கள் என் நம்பிக்கைகள் போல் இப்போது தான்  துமிக்கதொடங்கியிருக்கிறது அடகுவைக்கப்பட்ட தேசத்தில்  துமித்தென்ன  துளிர்த்தென்ன  பச்சைகள் மஞ்சள்ளாகியும் பைகள் நிரவக்காணோம்  இரப்பைகளை காற்றடைத்துகொள்கிறது வீழுந்துகொண்டிருக்கிறது துமியும் நம்பிக்கையும் வீழாதிருப்பதென்னவோ  நிலமும் சூரியனும் தான் சாரங்கன்

நறும்புகை

படம்
காலடியில் ஓய்வெடுக்கிறது  களைத்துபோன குழல் சிகரெட் நாற்றத்தை நறும்புகை என ஏற்றுக்கொள் சிதைக்கபடலாம் நீ  காணாமல் போகலாம்   ஆனால்  நீ தவறிழைத்து விட்டாய் மானிடர்க்காய் வாழ்வென்றில்லாது மதத்திற்காய் வாழ்வென்றாகிறது தெருக்களில் விழப்போகும் பிண்டங்களுக்காய் பிதிர் செய்ய யாருளர் விடுதலையின் பெயரால் சிறைவைக்கபடும் தேசத்தில்  நீ  சாரங்கன்

அர்ச்சனை

படம்
  முட்டிச்சரித்து  வீழ்ந்து  புரண்டு  திடப்படுத்தி வீடடைந்த பின் தொடங்கும் அர்ச்சனைகள் அர்ச்சனைகளின் பின் அர்ச்சனைகள் செவ்வாய் வெள்ளி வியாழன் சனி என்றெல்லாம்  உயிர்ப்பலி நிறுத்தி  தொடங்கும் ஆகாரம் எண்பதுகள் அறுபதுகளாய் நாற்பதுகளாய் நிற்கின்ற போதும் துரத்தும் முரண் முட்டல்கள் முடிவுறு வளத்தை சேமிப்பதாய் முடிவெடுத்து  நடக்க தொடங்கியாச்சு  அர்ச்சனைகள் குறையட்டும்  சாரங்கன் 1020 30082021

இராவணனுக்கான போர்

படம்
 இலங்கைத்தீவிலே சிங்களவருக்கும் தமிழர்க்கும் அரசியல் பொருளாதாரம் நிலம் உரிமை என்று தொடர்ந்து வந்த முரண்கள் தற்போது தொன்மம் சார்ந்த விடயங்களிலும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.  நில உரிமையை இல்லாது ஒழிப்பதற்கு இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக வாழும் இனம் இதை கையில் எடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இராவணன் பற்றிய உரிமை கொண்டாடுதல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது . இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகரங்களை வர்ணமயமாக் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ராவணன் படம் முதன்மை நகர்கள் அத்தனையிலும் வரையப்பட்டிருந்தன கண்டி சிகிரியா மாத்தறை தம்புள்ளை போன்ற கலாச்சார நகர்களில் ராவணனின் ஓவியங்கள் பெரும்பான்மைச் சுவர்களை அலங்கரித்து இருக்கின்றன . அதைவிட இருமொழிகளிலும் இராவணன் தொடர்பான தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன . இராவண வம்சம் என்று அடையாளப்படுத்தும் பலரை சமூக ஊடக வெளிகளில் காணமுடிகிறது. தமிழ் மரபில் இராவணன் பற்றிய குறிப்புகளை பலர் கம்பராமாயணம் மூலமே அறிந்து கொண்டிருக்கின்றனர் . அக் காவியத்தின் படி எதிர்நிலை காவியத்தலைவன் இலங்காபுரி ஆண்டவன் அரக்கர் குலத்தவன், சீதையை அபகரித...

கஜலும் நானும்

படம்
  நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் அக்கா  வாசித்துப் பார் என்று தந்த கஜல் கவிதைகள் தொகுப்பு ஒன்றை வீட்டு முடக்க காலத்தில் வாசித்துமுடித்தாகிற்று. பால்யத்தின் எல்லை விளிம்புகளில் நின்று வாசித்த போது வராத அனுபவ உணர்வுகளை இப்போதைய  வாசிப்பு தந்திருக்கிறது . இரண்டு அடிகளைக் கொண்ட கண்ணிகள் ஷேர்் எனப்படும் .இந்த ஷேர் களின் தொகுப்பு கஜல் எனலாம். தமிழுக்கு இந்த வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் அப்துல் ரகுமான் . அவர் கஜல் பற்றி குறிப்பிடும்போது கஜல் அரபியில் அரும்பி பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகிய இலக்கிய வடிவம் என்கிறார் . கயலின் இலக்கணம் கிட்டத்தட்ட குறள் வெண்செந்துறை ஒத்தது.      "ஈரடியான் அளவொத்த இயங்கிடும்            எட்டு சீருள்ளதே குறள்    வெண்செந்துறை"             என தொல்காப்பியம் குறள் வெண்செந்துறை இலக்கணம் கூறுகிறது .ஆனால் கஜலிறகும் வெண்செந்துறைக்கும் வேறுபாடு உண்டு . கஜல் இரண்டு அடிகளில் சம அளவுகளில் எத்தனை சீர...

மாசு

படம்
 எழுதாத கவிதைக்கு  இடவிரும்பிய தலைப்பிது வார்த்தைகள் ஏதும் சுழன்றடிப்பதாய் நானுரவில்லை மார்பையும் விழிப்புருவத்தையும்  கூடலையும் ஊடலையும் நாம் பேசக்காணோம் மையெங்கும் கவிச்சைநாற்றமடிக்க பிறகெங்கே கவிதைவரும் நெருங்குவார கதியில் சதுரங்கபலகையின் கடைசி சிப்பாயோடு நாமிருக்கிறோம் பகைவனோ சீண்டி துவம்சமாக்கிறான் தற்காப்பே வழியென்றாகிறது தடுத்தாலும் குற்றம் எழுந்தாலும் குற்றம் இங்கெப்படி கவிதை வரும் நல்லிணக்கதூதர்முகாமிட்ட தீவொன்றில் காகித இணக்கத்தால் கலைந்துபோகிறது நீளும் காலத்திலாவது சிதைவுகள் கருவாகாது சிதிலமடையா கருவொன்றிறகாய் கவிவரட்டும்

தோழமை காதல்

படம்
 வா விசும்புடை விஞ்சிய பிரியமே விண்ணதிர முரசறைந்து புனல் ஆடி நாம் இருவர் மறையோன் இலா மாண்புறு பெரியோன் வள்ளுவம் உரைக்க வந்தோர் போற்ற வாழ்வினையராவோம் தோள் உரசி  தோழமை பேசி எல்லையில்லா தேசமெங்கும் அலைதலுற்று கூடிக் கிழப்பருவம் எய்தி உடல் விட்டு  முகிலினங்களாய் காதலிப்போம் அங்கும்

நூலக எரிப்பு நாளும் வாசிப்பூட்டலும்

படம்
 யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்ச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை வடிவங்களில் ஒன்று அறிவுக் கருவூலத்தை  சேதமாக்கல்.சரஸ்வதி மஹால் ,யாழ்ப்பாணப் பொது நூலகம், இறுதி யுத்தத்தின்போது என இப்பட்டியல் நீள்கிறது . தமிழ்ச் சமூகம் இறுதி யுத்தத்தின் போதான படுகொலைகளைப் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறது ஆனால் அத்தோடு இணைத்து பேசப்பட வேண்டியதாக அழிந்துபோன பொது ஆவணங்கள் நூல்கள் பத்திரிகைகள் பற்றிய செய்திகளும் தான் .அவை அழிந்து போன தோடும் சொல்லப்படவேண்டிய பல செய்திகளும் சொல்லாமல் ஆக்கப்பட்டு விட்டன யாழ்ப்பாண நூலக எரிப்பு தினம் தொடர்பாக இன்றுவரை சர்ச்சைகள் காணப்படுகிறது நூலக எரிப்பு தினம் தொடர்பாக வந்த சஞ்சிகைகளிலும் நூல்களிலும்  இரு தினங்கள் குறிக்கக் இருப்பதே இதற்கான காரணமாகும். அது ஒருபுறமிருக்க நூலக எரிப்பு அதன்பின் புணரமைப்பு இன்றைய இணைய நூலகங்கள் தொடர்பில் தமிழ்ச்சமூகம் அடைந்துள்ள புரிதல் என்ன என்பது சிந்திக்க வேண்டியுள்ளது.  யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது 97 ஆயிரம் நூல்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது . ஒற்றை பிரதிகளே ...

வெறிச்சோடிய பள்ளி

படம்
  ஸ்வேதாம்பரமாய் நிற்கிறாய் நீ உன்னைத்தானே  எரித்தார்கள் ஏன் எதற்காக தம்மபதம் இருந்ததனாலோ  கருஞ்சட்டையை  ஏன் பூசி மெழுகினார்கள  நீ சான்றாகி விடுவாய் என்றா? பள்ளியாய் இருந்த நீ  வெறிச்சோடி போனதேன் சமணர்கள் எங்கே போனார்கள் நாடுகடத்தப்பட்டனரா? காணாமல் ஆக்கப்படனரா? கழுவேற்றப்பட்டனரா? சாரங்கன் 31052021 1222

நுணலின் அந்திமம்

படம்
 நுணலின் அந்திமம் காலியாக்கப்பட்ட குவளையில் மீதமிருக்கிறது  இறுதி மிடறின் எச்சில் ஈரம் சிறைவைக்கப்பட்ட பொழுதுகள் சிதிலமாக்கப்படுகிறது  சிதைக்கப்படும் வாழ்நாளை  எண்ணி துயருறுவதா ஓய்வை எண்ணி மகிழ்வதா என்றுழல்கிறது  தனிமையின் வெறுமையும் சூழுறவுகளின் விலகல்களும்  ஏனோ சுழன்றடிக்கிறது வெண்தோல் மொழிதனை  கற்றுணர முயலும் பொழுதெல்லாம் வானத்தில் வண்ணநிலா எழுந்துவிடுகிறது பிறகென்ன குவளைகளின் ஈரங்களோடு  நுணல்களை அமைதியாக்குவோம் சாரங்கன் 2207 22052021

இறுதி நேசம்

 நாளை  உனக்கானதா எனக்கானதா என் நாட்கள் எப்படியிருந்த்து கடலருகில் இருந்தபோதும்  உப்பிருக்கவில்லை  மருதத்தில்  இருந்தபோதும்  மண்சோறும் இருக்கவில்லை தீக்குச்சிகள் ஆயிரங்களில்  விலையாக்கபட்டபோது  தீப்பிளம்புகளை பரிசளித்தாய் சாம்பிராணிபுகைக்காய் கந்தகத்தை பரிசளித்தாய் இப்போது  சொல்  யாருக்கானது  சாரங்கன் 2001 17052021

ஆறுமுகநாவலர்

 அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் ஆறுமுகநாவலர் தொடர்பான சில வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை அவதானித்து இருக்கின்றோம்.சைவசமய பாடத்திட்டங்கள் மூலம் பெரும்பாலானவர்களுக்கு அறியப்பட்ட ஒருவராக ஆறுமுகநாவலர் விளங்குகிறார்.இவர் பற்றிய 5ம் குரவர் ,பதிப்பாசிரியர் போன்ற வழமையான தகவல்களை தவிர வேறு சிலவற்றை தேட மேற்படி சமூகவலைத்தள பதிவுகள் ஊக்கமளித்தன.அந்த தேடலில் கிடைத்தவற்றை வைத்தே இந்தக்கட்டுரை எழுதப்படுகின்றது. டிசம்பர் மாத முன் முன்னரைப்பகுதியில் ஆறுமுகநாவலரின் குருபூசை,நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது.அந்த மாதத்தில் வெளிவரும் பத்திரிகையில் இக்கட்டுரை வெளிவருவது நாவலரை நினைவுகூற வழிவகுக்கும் என நம்புகிறேன்.நாவலரின் உடைய வரலாற்றை தேடிப்பார்க்கும்போது இராமலிங்க வள்ளலாருடன் ஏற்பட்ட கருத்தியல் முரண் முதற்கொண்டு அவர் ஓவியம்/புகைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் வெளிவந்துள்ளது. ஆரூரனில்லை புகலியர் கோனில்லை அப்பனில்லை சீருரு மாணிக்கவாசகனில்லை திசையளந்த பேருரு ஆறுமுகநாவலனில்லை பின்னிங்குயார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே.(உடுப்பிட்டி சிவசம்புப்புலவர்) நாவலர் நல்லூரிலே 1822ம்...

கவியரங்க கவிதை

 வற்றாத தமிழை வாரி வழங்கி வளமிகுந்தோர்  சபையில் சற்றேனும் குறையில்லா வார்த்தையது தருமிறையே திருவருள் வேண்டுகிறேன் அரங்கத் தலைமைக்கு  வணக்கம்  கோதுடைக்கும் குஞ்சுகளாய் குறிஞ்சியில் மேடை கண்டோன் குஞ்சுகள் பாடும் வார்த்தை கோர்வைக்கு அரங்க தலைமை ஏற்றோன்  தயாநிதியாய்  கலாநிதியாய் தமிழைச் சேவிக்கும் அய்யன் திருவடி வணக்கம் காத்திருந்தவன் இருத்தலைக் கவிதை ஆக்குகிறான்  தொன்ணூறின் குழந்தைகளுக்கு இருத்தல் ஏதும் புதிதோ  கானகத்து வாழ்வியலோடு கணினியின் வாழ்வதையும் மொழியால் இருத்தலாக்குகிறேன்  பொறுத்து இருத்தல் இயலாதாருக்கு பூவுலகு காதல் அறியார் எனக்காண்   இருத்தலை கவிதையில் இழத்தலை பேசாது விடலாமோ காடழித்து கழனியாக்கி வீடமைத்து  எல்லையிலே காவல் இருந்தான் மனையாளோ வீட்டிலே காத்திருந்தாள்  'அறவை நெஞ்சத் தாயார்'  எல்லைகாக்க எழுந்து நின்றனர் இங்கும் அப்படித்தானே எல்லைகள்  திருடல் எக்காலமும் நிகழும் போலும் பசலை பூத்தவள் பந்தலில் காத்திருக்க பாசறையில் நில மகளோடு காதல் கொண்டவன் வேலோடு நின்றான் செம் மலையும் குருந்தூரும் கண்ணெதிரில் நின்றதால்...