ஆல்

 காலா!

நீ விதைத்தவை

கடந்தும் கடத்தப்பட்டும்

நிற்கிறதிங்கே

விதைக்கப்பட்டவை

அகழ்ந்தெடுக்கப்பட்டன

மயிற்பீலிகளும் நறுஞ்சாந்துகளும்

உமணர்கள்

 கபளீரம் செய்தனர்

வீழ்ந்தபட்டதால்

நினைத்தலாகாதாம்

அந்தோ ஓர் மாலை

முடிவுற்ற போது நிர்கதியானோம்

சிதைத்தவை தீர்த்தங்காரராய் 

சேதி சொல்லும் நாள்

தொலைதூரமில்லை



* உமணர்கள்- உப்பு வியாபாரிகள் 



சாரங்கன் 

22/11/21

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு