இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"அட்டை"

 அன்றொருநாளில் கூப்பன்  அட்டையில்லையென  அரிசி மறுக்கப்பட்டது  பசிந்திருந்தோம் பின்னொருநாளில் குடும்பக்காட்டில் அண்ணன் படமில்லையென அவனை இழுந்துச்சென்றனர் அதன் பின் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்  இன்றைக்கு கொவிட் காட் இல்லையென எனை  உட்செல்லவிடவில்லை  எங்கள் தேசத்தில் மனிதர்களைவிட காட் களுக்கு மதிப்பதிகம் 301121 2141

அருளற்ற கடவுளர்கள்

 எங்கள்  கடவுளர்க்கு அருள் உண்டா? அவலங்களை மட்டுமே தந்தெமை வஞ்சிக்கின்றன கனமழையும் கடும்பசியும்  காவுகொள்கின்றன எங்களூர் அரசியல்வாதிகளுக்கும் கடவுளர்க்கும் ஒப்பந்தமேதும் போலும் கேட்பதுவும் இரப்பதுவும்  நம்வேலை  மறப்பதுவும் மறைப்பதுவும் அவர்கள் வேலை தேர்தல் காலவாக்குறுதிகள் சர்ப்பத்தோலாய் கழன்று விடுகிறது புராணங்களில் படித்ததெவையும் நிகழக்காணோம் 'அரைசியல்  பிழைத்தோர்க்கு  அறம்கூற்றாகுமாம்' கூற்றாகிமட்டும்  நிற்கிறதிங்கே முன்னோர் பொழுதொன்றில் தேசத்தின் காவற்தெய்வங்கள் அகன்றன சூழ்கலி  அகலயாரை இரப்பது.. சாரங்கன்

முதுமையின் ப்ரியங்கள்

படம்
 ஆதிரா பிரிந்து விட்ட போதும்  நீயென் பிரியமுடையாள் பிரிவின் பின்னரான வாழ்வில் அப்படி உரைத்தல் ஆகாதாம் தோளோடு தழுவிய நிழல்களை  மிட்டல் குற்றம் என்கிறாள் இல்லாள் அதை மறுத்து சப்தமிட்டு உரைக்க  நானோ வீரமற்றவனாகிறேன் இன்றோ   கரம் கோர்த்த வீதியில் உன்னைப் போலொருத்தி கண்டேன் நினைவுகளில் அந்த இருக்கையும் ஆலமரத்தடியும் அணில் ஓடிய மதிலும் வந்தேனோ நின்றது நின்பால்யத்தை நினைத்தொரு பெருமூச்சிலாழ்ந்து நினைவுச் சகதிகளை நினைத்தேனை அழித்திட முயன்று தோற்று விடுகிறேன் விசுவாசிக்கிற அன்பினுள் தோய்தல்  முதுமையின் வரிகளில்  இயலாது போய்விடுகிறது பால்யத்தை மீட்டெடுக்க நரைகளை நிறமூட்டி சுருக்கங்களை மறைத்துக் கொள்கிறேன் சாரங்கன்

ஆல்

படம்
 காலா! நீ விதைத்தவை கடந்தும் கடத்தப்பட்டும் நிற்கிறதிங்கே விதைக்கப்பட்டவை அகழ்ந்தெடுக்கப்பட்டன மயிற்பீலிகளும் நறுஞ்சாந்துகளும் உமணர்கள்  கபளீரம் செய்தனர் வீழ்ந்தபட்டதால் நினைத்தலாகாதாம் அந்தோ ஓர் மாலை முடிவுற்ற போது நிர்கதியானோம் சிதைத்தவை தீர்த்தங்காரராய்  சேதி சொல்லும் நாள் தொலைதூரமில்லை * உமணர்கள்- உப்பு வியாபாரிகள்  சாரங்கன்  22/11/21

காமன் கூத்து

படம்
 கணனியில் பழைய கோப்புகளை தேடிக் கொண்டிருந்தபோது நினைவுகளோடு இந்த காணொளியும் கண்ணில் பட்டது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி சரசவிகம கிராமத்தில் இந்த காணொளியை எடுக்கப்பட்டது. தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த மலையக கிராமம். என் மலையக பயணங்களில் இங்குதான் இரட்டை லய வீடுகளை கண்டிருக்கிறேன். பிரமதாச வீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது இவ்வீடுகள் வழங்கப்பட்டதாய் அவ்வூர் முதியவர் சொன்ன ஞாபகம். ஒரு பங்குனி மாத மாலை நேரத்தில் ஹிந்தக்கல விடுதிக்கு சற்றுத் தொலைவில் உள்ள தையல் கடைக்குச் சென்றபோது எதேச்சையாக கடைக்கார அண்ணா எங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது இன்றைக்கு கூத்து இருக்கிறது வாருங்கள் என்று கேட்டார் ஓம்மென்று தலையாட்டி பயணப்படலாயிற்று.   யாழ்ப்பாணத்தில் ஊடகத்தில் பணியாற்றியபோது பல கூத்துக் கலைஞர்களை சந்தித்திருக்கிறேன் நேர்காணலும் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு கூத்தையும் எனும் நேரடியாய் பார்க்க வாய்ப்பு ஏற்படவில்லை கூத்துக்களுகளங்கள்  இன்று குறைந்து வருகிறது என்ற கவலையுடன் பலர் பேசுவதையும் கேட்டிருக்கிறேன். சரசவிகம கிராமத்திலே கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் கூத்து நிகழ...

கோட்டோவிய அழகியல்

படம்
 இன்றைக்கு ஆண்கள் தினம் என்ற செய்தி புலனத்தில் ஆங்காங்கே பதியப்பட்டிருந்தது. ஆண் தோழமைகளே  நமை வாழ்த்த யாரும் இல்லை என்ற அங்கலாய்புகளோடு பதிவுகளை இட்டிருந்தார்கள். ஒரு சில பெண் தோழமைகள் சற்று வித்தியாசமாய் தங்கள் சுவற்றில் பதிவுகளை இட்டிருந்தனர் . இயற்கையின் படைப்பில் பால்ரீதியான வகைப்பாடு இயல்பானது. ஆண்,பெண் என உடலியல் ரீதியான வகைப்பாட்டோடு மனரீதியான உணர்வுநிலைகளால் மாற்றுப்பாலினத்தாரும் தனி ஓர் பாலினத்திற்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.பால் ரீதியான தினங்களின் அரசியல்,கொண்டாடல் பின்புலம் என்ன. சமூகத்தில் அதற்கான தேவைப்பாடு என்ன என்பதற்கான கேள்விகள் எழல் இயல்பானதே. என் அவதானிப்பில் ஆண்கள் தினம் கொண்டாட்டப்பட்டதை கேள்விப்பட்டதில்லை.ஏன் அதை பலர் அறிந்த்திருப்பது கூட கிடையாது. மகளீர்  தின கொண்டாடுதல்களும் ,இலக்குகளும் வெளிச்சொல்லப்படுமளவிற்கு இத்தினம் கரிசனை பெறுவதில்லை.அண்மைக்கால சமூகவலைத்தள பரவலாக்கம் இத்தினம் பற்றிய நினைவூட்டல்களையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பால் சார் தினங்களின் தேவை எவ்வாறு எழுந்திருக்கும்.உரிமை,அடையாளம்சார் உறுதிப்படுத்தல்களின் தேவையே இவற்றை அங்கிகரி...

மீளத்திரும்பல்

படம்
 பிஞ்சொன்று விழிபிதுங்க தெருக்கடக்கின்றது  காலச்சுழல் மாற்றிவிட  அதற்கு இது புதிசு விட்டம் பார்த்து புரண்டெழும்பி பொழுதுபோக்கியதற்கு தெருவெளிகள் வெருட்சியாகிறது நேயச்சூழலினுள் அது இனி வயப்படும்  அகரம் வரைவோர் நினைவிலிருப்பர் உருண்டு பிரண்டு  குத்திமுறித்து  அலாப்பி தெளிந்து ஞானமடையும்  தெளிவடையிடையில் முடக்கங்களால் தடக்கங்கள் விளையும் திரைகளை காணததொன்று சாளரமோரம் தயங்கும் சாரங்கன்

வெளிகளில் ஒவியம்

படம்
 ஆதிரா சூன்யவெளியாய் நீள்கிறது  நினைவு வெளி கூடி குழைந்து காதோர கணகணப்பில்  லயித்து முத்தத்தில்  அந்தோ ப்ரியத்தில்  எல்லையில்லா  கணங்களின்  அந்த நிமிடங்கள்  இன்றேங்கே வெளிகளின் தேடலாய் நீ மொழிகளின் தேடலில்  நான்  அந்தோ  மூன்றாம் பிறை  வளரட்டும் தேயட்டும்  கதிர் சுடர் ஒளியாய் சுடரெளட்டும் நினைகுழையத்தில் நின்வாசம்கமகமகட்டும் அந்தோ தெருவோர மின்குமிழில் லயிருத்து யாசிக்கமறந்திருக்கும் அவன்போலொருவன் இங்கனமுளன் நீயுணர்  களைத்து லயித்து முகிழ்த்து மகிழ்த்தல் அந்தோ தொலைவில்லை சாரங்கன்

ஜெய்பீம்

படம்
  இன்றைக்கு ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து முடித்தாயிற்று. இன்றுவரை தமிழகச் சூழலில் அடக்கு முறைக்கு உட்பட்டு வரும் இருளர் பழங்குடி மக்களின் நீதிக்கான போராட்டத்தின் ஒரு துகள் திரையில் வந்திருக்கிறது. "நீதி என்பது அரசின் வன்முறை" என எங்கோ வாசித்த ஞாபகம் தொழில், தொழிலுக்கான இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் பழங்குடி மக்கள் பற்றிய பார்வை என நகரத் தொடங்கும் திரைக்கதை நீதி கோரல், வழக்குகளில் கட்டிப் போட தொடங்குகிறது. ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் தத்ரூபமாய் செதுக்கி இருக்கிறார் .இருளர் தமிழக பழங்குடியினர்கள் ஒரு இனக்குழுமம். Diffloth geravad   என்கின்ற அறிஞர் " இருளர் மொழி " எனும் நூலில் "இருளர் என்ற சொல் பல்வேறு சமூகக் கூறுகளை குறிக்கும் சொல்லாக   ,கேரளம் ,மைசூர் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது .ஆனைமலை பகுதியில் அட்டப்பாடியில் வாழும் இருளர் வட்ட இருளர் என அழைக்கப்படுகின்றனர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைநாடு அல்லது மேலைத்தேச இருளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்". என்கிறார் படம் முழுதும் இருளர் சமுதாய மக்கள் அரசு இயந்திரத்தால் ஒடுக்கப்படும் விதம் தேர்தல் ஜனநா...