நுணலின் அந்திமம்

 நுணலின் அந்திமம்


காலியாக்கப்பட்ட குவளையில் மீதமிருக்கிறது 

இறுதி மிடறின் எச்சில் ஈரம்

சிறைவைக்கப்பட்ட பொழுதுகள் சிதிலமாக்கப்படுகிறது 

சிதைக்கப்படும் வாழ்நாளை 

எண்ணி துயருறுவதா

ஓய்வை எண்ணி மகிழ்வதா என்றுழல்கிறது 

தனிமையின் வெறுமையும்

சூழுறவுகளின் விலகல்களும் 

ஏனோ சுழன்றடிக்கிறது

வெண்தோல் மொழிதனை 

கற்றுணர முயலும் பொழுதெல்லாம்

வானத்தில் வண்ணநிலா எழுந்துவிடுகிறது

பிறகென்ன

குவளைகளின் ஈரங்களோடு 

நுணல்களை அமைதியாக்குவோம்


சாரங்கன்

2207

22052021

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு