இடுகைகள்

முன்னிரா

  கற்றல்   மண்டபங்கள்   நிறைந்தன குலாவிய   காதலர்கள் சற்று   நிறுத்தினர் மூசுபனிவீச   திணை   கண்டு   வந்தான்   தோழன் நட்சத்திரங்களை   கணக்கிட்டு   மயக்கங்கள்   கண்டு   தெளிந்தேன் மண்டபங்கள்   வெளிக்கட்டும் காதலோ   கொடிது   நின்   துயர்   நான்றிவேன்   கரந்தையில்   துஞ்சிய   அவன்   போல்   உன்   காதல் நடுகல்லாகாதிருக்கட்டும் சஞ்சலம்விட்டுவா   வீண்மீன்களை   ரசிப்போம்

அவர்வயின் விதும்பல்

ஆதிரா நீள்   தலால்   நிகழ்ந்தென்னை நினைத்து   வருத்தியுழைகிறாய் கமழ்தார்   மார்பனைய   சூடொன்று   கண்டிலோம்   முயங்கி   சலித்திடா   மயிரொதுக்கிய   முன்னெற்றி முத்தசுவை கண்டிலோம்   நின்னால்   நின்   பிரிவால் பொழில்   குறிஞ்சி   நீள்பாலையால்   தகிக்கிறெனக்கு அகவெளியிடை   தகிப்பால் தளர்வுற்றுபோகிலேன்   சாரங்கன்   1919

குறியிடப்பட்ட சிலை

​நீள் இரவொன்றில்  தனித்திருந்து முகாரி இசைக்கிறேன் மின்னும் வீண்மீனோ தீர்க்கபட்ட சன்னங்களின் நொடியை வீசித்தீர்கிறது சாமரைகள் தாமரைகளுக்காகிறது நுணலும் ஆ ககளும் கறுப்புகளின் போட்டிகளில் சுபமிடபடுகிறது  வரையபட்ட பட்டையொன்றின் மோதலில் கலசங்களின் வைப்புகள் மறைக்கபட்டன அந்தோ  நொடியின் நொடியில் நிலமொன்றின்  கபளீகரம் இங்கொன்றாய்  நீள்கிறது சாரங்கன் 2026

அப்பக்கதைகள்

படம்
இப்போதெல்லாம் வாழ்க்கை பெரும்பாலும் பயணங்களினூடே கழிந்துவிடுகிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து சிவன் கோயிலடியை தாண்டுவதறகிடையில் சத்தி எடுத்து திரிந்த  நான் பயணங்களை நித்தியமாக்கிகொண்டேன். வாரத்திறகு குறைந்த்து 1000 கிலோமீற்றர் இப்போதைய கணக்கு.பயணங்களில் சந்திக்கின்ற மனிதர்களும் புசிக்கின்ற உணவுகளும் நினைவடுக்குகளில் என்றைக்கும் நிலைத்திருக்கும் . முருகண்டி கச்சானில் தொடங்கி மருதங்கடவ சோளம் கண்டி பொல்றொட்டி எனபெல்லாம் தினபண்டபட்டியில் இருக்கும். ................... ஹெலபோஜன் என்றோர் கடை தென்பகுதிகளில் வெகுபிரபல்யம் இந்தமாதிரியை வைத்துத்தான் வடமாகாணசபை அம்மாச்சியை உருவாக்கியதாகவும் பெயரை வைபதறகு கூட இழுபறிபட்டதாகவும் செவிவழியாய் கேட்டஞாபகம். இங்க அம்மாச்சி கதை தேவையற்றது எண்டு நினைக்கிறேன் .செவ்வாய் வெள்ளி பெரும்பாலும் ஹெலபோஜனின் தட்டல்களில் பொழுது புலர்ந்து அலர்ந்துவிடும்.இணுவிலின அயலூர் என்பதால் செவ்வாய் வெள்ளி நித்தியசைவம். அணமையிலே அங்கே ஓர் உணவுத்திருவிழா.விதம் விதமாய் சிங்கபணபாட்டு உணவுகளை சமைத்து விற்றுகொண்டிருந்தார்கள்.புட்டு என்று ஒன்றையும் அவர்கள் செய்யமுயறத்துகொண்டிருக்கிறார...

குறிக்கப்படா நினைவு

படம்
​ தள்ளி வைக்கபட்ட அணைப்புகளில் சந்திப்பின் வரவுக்குறி யுகந்திரமாய் நீள்கிறது தீர்மானிகப்படாதது  இது எப்படி  எங்கிருந்து  எதனால் சித்தார்தன்  சங்கத்தை விட்டு  நொடிகளை உணர்கிறான் அந்திமங்களை விட்டு  அலாதிகளை அணைகிறான்  காவிகளை களைகிறான் அந்தோ  விசும்பின் வெண்மேகங்கள் இணைந்தன தள்ளிவைப்பட்டவை  மேகந்திரள் சூழ்கிறது 21.23

பேரன்ப

  தோழர்களின்  சிரிப்புகளால் நிறைந்துகிடக்கிறது  உன் அறை  எப்போதோ  சந்தேகம் கொண்டார்கள்  ஏனென்று நாமறியோம் இங்கொன்றும் காதலில்லையென  எப்படி சொல்லாம் நீ சொல்... அவளொருத்தி  உன் முகம் சிவந்த்தாய் புலம்பித்தீர்க்கிறாள்  காதலற்ற உறவொன்றின்  இழையங்களை  எப்படி சொல்லுவோம் வா கண்டடைவோம்

லவ்ருடே

படம்
 Love today "காதல் என்பது  புரிதல்களில் கட்டியெழுப்படும் பேரன்புலகு  இரண்டு நாட்களுக்கு முன் lovestoday தோழர்களோடு பார்த்தாயிற்று. நண்பர்கள் பலரின் பின்னூட்டல்களும் விமர்சனங்களும் இத்திரைப்படம் மீதொரு ஆர்வம் ஏற்பட காரணமாய் அமைந்தது.  இத்திரைப்படம் என்னைப்பொறுத்தவரை தொண்ணூறுகளின் பின்பிறந்த இளையவர்களின் வாழ்வியலை மைப்படுத்தி எடுக்கபட்டபடம் .வழமையாய் தென்னிந்திய திரைப்படங்களில் சப்பைகட்டிநிறகும் கதாநாயகத்தன்மையோ மலினப்படுத்தப்பட்ட கவர்ச்சியோ இரட்டை அரத்தவசனங்களோ இல்லாமை படத்தின் தனித்தனமையை காட்டிநிற்கிறது. காதல் என்பதை பலர் முற்றுமுழுதான சரணாகதியென்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.என் தொடர்பிற்குள் உள்ள சிலர் கூட தங்களோடு மட்டுமே கதைக்கவேண்டும்,அனுமதிபெற்றுத்தான் வெளிச்செல்வது என்பதெல்லாம் தான் காதலின் பிடிமானங்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். காதலிக்கின்ற இருவர்களுக்கும் தனிவேறு உலகம் இருக்கிறது என்பது என் தெளிவு . lovestodayயின் கதைக்கருவும் அதுவே. முன் தலைமுறையிடம் காதற்பிரிவென்பது பெரும் அவலமாய் கருதப்பட்டிருக்கிறது.அது மெல்லமெல்ல கட்டுடைக்கப்பட்டு வருகிறது என்ப...

சூரியனைத்தின்றவர்கள்

படம்
  தமயந்தியை எனக்கு சத்தியன் தான் அறிமுகம் செய்துவைத்தார்.கடல்அட்டைவளர்ப்பு பற்றிய நிகழ்ச்சியொன்றை செய்வதற்காய் சிலவற்றை தேட வேண்டியிருந்த்து.அப்படி தேடிக்கொண்டிருந்த்த போது சத்தியன் அன்பளிப்பு செய்த புத்தக ம் தான் சூரியனைத்தின்றவர்கள்.என் வாசிப்புக்கள் இப்பொழுதெல்லாம் மேலெழுந்தவாரியான தேவைகருதியவாசிப்புக்கள் தான்.ஏனோ தமயந்தியை நேரமொதுக்கி வாசிக்கதொடங்கினேன்.தமயந்தியை கவிஞன் என நான் மதிப்பிடுவதை விட கடற்காற்றின் உப்புசுவையளவை சுவாசித்தே சொல்லும் நல்ல கடலவதானி என்பேன்.கவிதைகள் முழுதிலும் கடலே வியாபித்து நிற்கிறது.  கரிசல் இலக்கியங்களை வாசிக்கும் போது சில சொல்லாடல்கள் அந்தியமாய் தென்படும். அது வட்டாரவழக்கு.தமயந்தியின் கவிதைகளிலும் தாராளமாய் கடற்கரை வட்டார வழக்கு ஆதிக்கம் செலுத்துகிறது.சடக்கஞ்குச்சி என்பதெல்லாம் புதியசொற்களென நினைக்கிறேன்.கடல் உழவனின் வாழ்வியல் அவலம் பலகவிதைகளின் கருக்களாய் அமைகின்றதுwelcome drink,இறுதியாய் பேசவிடுங்கள்,முண்டச்சுறா சுடலைக்குருவி என்பன  கடலை வாசகனுக்கு காட்டும் கவிதைகளாய் அமைகிறது. ஈழத்து கவிதைமரபு போரை அதன் வலியை மட்டுமே பாடுகிறது எனபதற்கு மற...

கழிவறை இருக்கை

படம்
  மூன்று மாதங்களுக்கு மேலாக எழுத்து வாசிப்பு என்பன வெகுவாய் குறைந்துபோய்விட்டது.வேலைச்சுமை ஒரு புறம் இருந்தாலும் நான் நேரமொதுக்குவதில்லை என்பதே உண்மை. தேவைகருதியவாசிப்புகளோடு மூன்றரைமாதங்கள் கடந்திருக்கும் . சமூகம் பேசதுணியாத விடயங்களில் ஒன்று காமம்.அதை இன்னமும் அபத்தமாய் கருதும் மனிதர்களை தினம் கடந்துகொண்டிருக்கிறேன்.ஏன் காதலை கூட அபத்தமாய் கருதுபவர்களை கண்டிருக்கிறேன்.ஒரு ஆண் பேசும்பெண் என்றால் வாழ்க்கை துணை என்றெல்லாம் கருதுபவர்களும் எங்கள் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதனை கடிந்துகொள்ளவோ அவரகளுக்கு புரியவைக்கவோ நானெப்போதும் முயன்றதில்லை .என் நிலைப்பாட்டில் நானென்றும் உறுதியாய் இருந்திருக்கிறேன்.காதல்,காமம்,பயணத்துணை,தோழமை என்பெல்லாம் வெவ்வேறு உறவு நிலை என்ற நிலைப்பாட்டில் நானிருக்கிறேன். இது நான் சந்தித்த மனிதர்களால் வாழந்த சூழலால் பெற்ற தெளிவு நிறக கழிவறை இருக்கை தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்ட நூல்.லதா எழுதியிருக்கின்ற முப்பத்திரண்டு கட்டுரைகளை கொண்ட நூல். தமிழ்சூழலில் பேசாப்பொருளாய் இருக்கும் காமத்தை மேலெழுந்த வாரியாய் பேசுகிறது.காமத்தை காதலை சிலபுள்ளிகளால் தொடும் ...

தீர்ப்புக்கள்

 கோ வென்றனர் மீட்பர் என்றனர் உரத்துகோசமிட்டு  வாழிய எம்மான் என்றனர் அரணாய் நின்றங்கு ஆம்பல் சூடி மகிழ்ந்தனர் இன்றோ காத்துநின்றவேலிகளை தகர்த்தெறித்தனர் காவல்வீரர்கள் கைகட்டிநின்றனர் அறம் தழைக்க ஊழ்வினைகள்  செய்வினைகளானது குடிதழீகோலோச்சா மன்னன்  முடிமேல் குடி அடி விழக்கண்டோம் சிதைத்த நடுகற்கள் எழுதியதீர்ப்புகள்