இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நூலக எரிப்பு நாளும் வாசிப்பூட்டலும்

படம்
 யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்ச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை வடிவங்களில் ஒன்று அறிவுக் கருவூலத்தை  சேதமாக்கல்.சரஸ்வதி மஹால் ,யாழ்ப்பாணப் பொது நூலகம், இறுதி யுத்தத்தின்போது என இப்பட்டியல் நீள்கிறது . தமிழ்ச் சமூகம் இறுதி யுத்தத்தின் போதான படுகொலைகளைப் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறது ஆனால் அத்தோடு இணைத்து பேசப்பட வேண்டியதாக அழிந்துபோன பொது ஆவணங்கள் நூல்கள் பத்திரிகைகள் பற்றிய செய்திகளும் தான் .அவை அழிந்து போன தோடும் சொல்லப்படவேண்டிய பல செய்திகளும் சொல்லாமல் ஆக்கப்பட்டு விட்டன யாழ்ப்பாண நூலக எரிப்பு தினம் தொடர்பாக இன்றுவரை சர்ச்சைகள் காணப்படுகிறது நூலக எரிப்பு தினம் தொடர்பாக வந்த சஞ்சிகைகளிலும் நூல்களிலும்  இரு தினங்கள் குறிக்கக் இருப்பதே இதற்கான காரணமாகும். அது ஒருபுறமிருக்க நூலக எரிப்பு அதன்பின் புணரமைப்பு இன்றைய இணைய நூலகங்கள் தொடர்பில் தமிழ்ச்சமூகம் அடைந்துள்ள புரிதல் என்ன என்பது சிந்திக்க வேண்டியுள்ளது.  யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது 97 ஆயிரம் நூல்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது . ஒற்றை பிரதிகளே ...

வெறிச்சோடிய பள்ளி

படம்
  ஸ்வேதாம்பரமாய் நிற்கிறாய் நீ உன்னைத்தானே  எரித்தார்கள் ஏன் எதற்காக தம்மபதம் இருந்ததனாலோ  கருஞ்சட்டையை  ஏன் பூசி மெழுகினார்கள  நீ சான்றாகி விடுவாய் என்றா? பள்ளியாய் இருந்த நீ  வெறிச்சோடி போனதேன் சமணர்கள் எங்கே போனார்கள் நாடுகடத்தப்பட்டனரா? காணாமல் ஆக்கப்படனரா? கழுவேற்றப்பட்டனரா? சாரங்கன் 31052021 1222

நுணலின் அந்திமம்

படம்
 நுணலின் அந்திமம் காலியாக்கப்பட்ட குவளையில் மீதமிருக்கிறது  இறுதி மிடறின் எச்சில் ஈரம் சிறைவைக்கப்பட்ட பொழுதுகள் சிதிலமாக்கப்படுகிறது  சிதைக்கப்படும் வாழ்நாளை  எண்ணி துயருறுவதா ஓய்வை எண்ணி மகிழ்வதா என்றுழல்கிறது  தனிமையின் வெறுமையும் சூழுறவுகளின் விலகல்களும்  ஏனோ சுழன்றடிக்கிறது வெண்தோல் மொழிதனை  கற்றுணர முயலும் பொழுதெல்லாம் வானத்தில் வண்ணநிலா எழுந்துவிடுகிறது பிறகென்ன குவளைகளின் ஈரங்களோடு  நுணல்களை அமைதியாக்குவோம் சாரங்கன் 2207 22052021

இறுதி நேசம்

 நாளை  உனக்கானதா எனக்கானதா என் நாட்கள் எப்படியிருந்த்து கடலருகில் இருந்தபோதும்  உப்பிருக்கவில்லை  மருதத்தில்  இருந்தபோதும்  மண்சோறும் இருக்கவில்லை தீக்குச்சிகள் ஆயிரங்களில்  விலையாக்கபட்டபோது  தீப்பிளம்புகளை பரிசளித்தாய் சாம்பிராணிபுகைக்காய் கந்தகத்தை பரிசளித்தாய் இப்போது  சொல்  யாருக்கானது  சாரங்கன் 2001 17052021

ஆறுமுகநாவலர்

 அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் ஆறுமுகநாவலர் தொடர்பான சில வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை அவதானித்து இருக்கின்றோம்.சைவசமய பாடத்திட்டங்கள் மூலம் பெரும்பாலானவர்களுக்கு அறியப்பட்ட ஒருவராக ஆறுமுகநாவலர் விளங்குகிறார்.இவர் பற்றிய 5ம் குரவர் ,பதிப்பாசிரியர் போன்ற வழமையான தகவல்களை தவிர வேறு சிலவற்றை தேட மேற்படி சமூகவலைத்தள பதிவுகள் ஊக்கமளித்தன.அந்த தேடலில் கிடைத்தவற்றை வைத்தே இந்தக்கட்டுரை எழுதப்படுகின்றது. டிசம்பர் மாத முன் முன்னரைப்பகுதியில் ஆறுமுகநாவலரின் குருபூசை,நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது.அந்த மாதத்தில் வெளிவரும் பத்திரிகையில் இக்கட்டுரை வெளிவருவது நாவலரை நினைவுகூற வழிவகுக்கும் என நம்புகிறேன்.நாவலரின் உடைய வரலாற்றை தேடிப்பார்க்கும்போது இராமலிங்க வள்ளலாருடன் ஏற்பட்ட கருத்தியல் முரண் முதற்கொண்டு அவர் ஓவியம்/புகைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் வெளிவந்துள்ளது. ஆரூரனில்லை புகலியர் கோனில்லை அப்பனில்லை சீருரு மாணிக்கவாசகனில்லை திசையளந்த பேருரு ஆறுமுகநாவலனில்லை பின்னிங்குயார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே.(உடுப்பிட்டி சிவசம்புப்புலவர்) நாவலர் நல்லூரிலே 1822ம்...

கவியரங்க கவிதை

 வற்றாத தமிழை வாரி வழங்கி வளமிகுந்தோர்  சபையில் சற்றேனும் குறையில்லா வார்த்தையது தருமிறையே திருவருள் வேண்டுகிறேன் அரங்கத் தலைமைக்கு  வணக்கம்  கோதுடைக்கும் குஞ்சுகளாய் குறிஞ்சியில் மேடை கண்டோன் குஞ்சுகள் பாடும் வார்த்தை கோர்வைக்கு அரங்க தலைமை ஏற்றோன்  தயாநிதியாய்  கலாநிதியாய் தமிழைச் சேவிக்கும் அய்யன் திருவடி வணக்கம் காத்திருந்தவன் இருத்தலைக் கவிதை ஆக்குகிறான்  தொன்ணூறின் குழந்தைகளுக்கு இருத்தல் ஏதும் புதிதோ  கானகத்து வாழ்வியலோடு கணினியின் வாழ்வதையும் மொழியால் இருத்தலாக்குகிறேன்  பொறுத்து இருத்தல் இயலாதாருக்கு பூவுலகு காதல் அறியார் எனக்காண்   இருத்தலை கவிதையில் இழத்தலை பேசாது விடலாமோ காடழித்து கழனியாக்கி வீடமைத்து  எல்லையிலே காவல் இருந்தான் மனையாளோ வீட்டிலே காத்திருந்தாள்  'அறவை நெஞ்சத் தாயார்'  எல்லைகாக்க எழுந்து நின்றனர் இங்கும் அப்படித்தானே எல்லைகள்  திருடல் எக்காலமும் நிகழும் போலும் பசலை பூத்தவள் பந்தலில் காத்திருக்க பாசறையில் நில மகளோடு காதல் கொண்டவன் வேலோடு நின்றான் செம் மலையும் குருந்தூரும் கண்ணெதிரில் நின்றதால்...