இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லவ்ருடே

படம்
 Love today "காதல் என்பது  புரிதல்களில் கட்டியெழுப்படும் பேரன்புலகு  இரண்டு நாட்களுக்கு முன் lovestoday தோழர்களோடு பார்த்தாயிற்று. நண்பர்கள் பலரின் பின்னூட்டல்களும் விமர்சனங்களும் இத்திரைப்படம் மீதொரு ஆர்வம் ஏற்பட காரணமாய் அமைந்தது.  இத்திரைப்படம் என்னைப்பொறுத்தவரை தொண்ணூறுகளின் பின்பிறந்த இளையவர்களின் வாழ்வியலை மைப்படுத்தி எடுக்கபட்டபடம் .வழமையாய் தென்னிந்திய திரைப்படங்களில் சப்பைகட்டிநிறகும் கதாநாயகத்தன்மையோ மலினப்படுத்தப்பட்ட கவர்ச்சியோ இரட்டை அரத்தவசனங்களோ இல்லாமை படத்தின் தனித்தனமையை காட்டிநிற்கிறது. காதல் என்பதை பலர் முற்றுமுழுதான சரணாகதியென்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.என் தொடர்பிற்குள் உள்ள சிலர் கூட தங்களோடு மட்டுமே கதைக்கவேண்டும்,அனுமதிபெற்றுத்தான் வெளிச்செல்வது என்பதெல்லாம் தான் காதலின் பிடிமானங்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். காதலிக்கின்ற இருவர்களுக்கும் தனிவேறு உலகம் இருக்கிறது என்பது என் தெளிவு . lovestodayயின் கதைக்கருவும் அதுவே. முன் தலைமுறையிடம் காதற்பிரிவென்பது பெரும் அவலமாய் கருதப்பட்டிருக்கிறது.அது மெல்லமெல்ல கட்டுடைக்கப்பட்டு வருகிறது என்ப...

சூரியனைத்தின்றவர்கள்

படம்
  தமயந்தியை எனக்கு சத்தியன் தான் அறிமுகம் செய்துவைத்தார்.கடல்அட்டைவளர்ப்பு பற்றிய நிகழ்ச்சியொன்றை செய்வதற்காய் சிலவற்றை தேட வேண்டியிருந்த்து.அப்படி தேடிக்கொண்டிருந்த்த போது சத்தியன் அன்பளிப்பு செய்த புத்தக ம் தான் சூரியனைத்தின்றவர்கள்.என் வாசிப்புக்கள் இப்பொழுதெல்லாம் மேலெழுந்தவாரியான தேவைகருதியவாசிப்புக்கள் தான்.ஏனோ தமயந்தியை நேரமொதுக்கி வாசிக்கதொடங்கினேன்.தமயந்தியை கவிஞன் என நான் மதிப்பிடுவதை விட கடற்காற்றின் உப்புசுவையளவை சுவாசித்தே சொல்லும் நல்ல கடலவதானி என்பேன்.கவிதைகள் முழுதிலும் கடலே வியாபித்து நிற்கிறது.  கரிசல் இலக்கியங்களை வாசிக்கும் போது சில சொல்லாடல்கள் அந்தியமாய் தென்படும். அது வட்டாரவழக்கு.தமயந்தியின் கவிதைகளிலும் தாராளமாய் கடற்கரை வட்டார வழக்கு ஆதிக்கம் செலுத்துகிறது.சடக்கஞ்குச்சி என்பதெல்லாம் புதியசொற்களென நினைக்கிறேன்.கடல் உழவனின் வாழ்வியல் அவலம் பலகவிதைகளின் கருக்களாய் அமைகின்றதுwelcome drink,இறுதியாய் பேசவிடுங்கள்,முண்டச்சுறா சுடலைக்குருவி என்பன  கடலை வாசகனுக்கு காட்டும் கவிதைகளாய் அமைகிறது. ஈழத்து கவிதைமரபு போரை அதன் வலியை மட்டுமே பாடுகிறது எனபதற்கு மற...