இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானும் சேகுவாராவும்

படம்
  கா.பொ.சாதாரணதரம் முடித்துவிட்டு விவாதம் எனகின்ற கனவுகளோடு சதா யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுத்திக்கொண்டிருந்தேன். அப்போது பாடசாலை நூலகம் இடம்மாறிக்கொண்டிருந்த்து. தற்போதைய சபாலிங்கம் மண்டபத்திற்கு கிழிருந்த அறையில் இருந்து பிரார்தனை மண்டபத்திற்கு முன்கட்டப்பட்ட மேல்மாடியில் நூலகம் ஒழுங்குபடுத்தும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சில புத்தகங்கள் கழிக்கப்பட்டு குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்கள்.அங்கே கண்டெடுத்த புத்தகம் ஒன்றின் மூலம் தான் சே நெருக்கமானார். என் எண்ணப்பாங்கு எல்லா நாட்டு கிளர்ச்சியாளர்களும் வென்றால்  புரட்சிவாதிகள் தோற்றால் ,வெல்லும் வரை தீவிரவாதிகள் .மொழியால் இனத்தால் வேறுபட்ட ஒருவனை உலகம் முழுதும் கொண்டாடுகிறார்கள் என்றால் அவனிடம் ஏதோ தத்துவ,கருத்தியல் செயல்தள ஈர்ப்பிருக்கிறது தானே. என்வாசிப்பனுவத்தில் சே ஓர் தத்துவியலாளராய் இல்லாது ஓர் செயற்பாட்டாளராகவே விளங்கினார். தத்துவ்வாதிகளை விட புரட்சியாளர்களின் பணிச்சுமை கூடியது. பொலிவிய கியூபக்காடுகள் என்று ஓர் தீயை விதைத்துச்சென்ற ஆளுமைதான் சே. சாகசப்பயணங்களோடு ஏனோ சேக்கு ஈர்ப்பு போலும்.ஈழத்தில் மருத்துவ...

தம்மபதமும் நானும்

படம்
மூன்று நான்கு மாதங்களுக்கு முன் விரிவுரை ஒன்றிலே தமிழ்பௌத்தம் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அந்த ஆர்வத்தில் பௌத்தம் பற்றி சிலதேடல்கள் விரிவடைந்த்தன. ஆரம்ப வகுப்புகளிலே மணிமேகலை பௌத்தகாவியம் என்றோர் குறிப்பொன்றோடு சுற்றித்திரிந்த நான் ஆர்வமிகுதியால் சிலவற்றை வாசிக்கத்தொடங்கினேன்.அதே சூழ்நிலையில் என்னைப்போலவே பௌத்ததை பற்றி பேசுகின்ற தோழமை ஒன்றும் வாய்க்கநேர்ந்த்து. அத்தோழமையோ சமகாலத்தில் ஓஷோவின் தம்மபத்தை வாசித்துக்கொண்டிருந்த்து. சிலவற்றை பகிரவும் மணிக்கணக்கில் கதைத்திடவும் தம்மபதம் பாலமாய் அமைந்த்து.இத்தேடலிலே பௌத்தமும் தமிழும்,தமிழ் இலக்கியங்களில் பௌத்தம்,இலங்கையில்சிங்களவர்கள், தம்மபதம்,பௌத்ததருமம் ,என்பன கண்ணில் பட்டது. இலக்கிய ரீதியான வரலாற்றுக்குறிப்புக்களோடு சில  பௌத்தவரலாற்றையும் அதன் சித்தாந்தங்களையும் பேசின. ஏனோ இதில் தம்மபதம் தனித்துவமாய் எனக்கு பட்டது. என் தம்மபதவாசிப்பென்பது எப்போதெல்லாம் நான் மனச்சிகலுக்குள் தவிர்க்கிறேனோ அப்போதெல்லாம் திரையை மேலே தட்டிவிட்டு வருகின்ற ஒரிரண்டு சுலோகங்களை வாசித்து  பகிர்வதோடு முடிந்துவிடுகிறது. பௌத்ததை மதமாய்  பார்க்காது ...

96ம் நானும்

படம்
 96 திரைப்படம் வந்து மூன்றாண்டுகள் என்கிறது புலனநினைவூட்டல்கள்.எனக்கும் இப்படத்திற்குமான தொடர்பை வைத்து தனிக்கதையே எழுதலாம். அப்போது நாங்கள் முதலாம் வருடம்.கிந்தகல விடுதி எங்கள் வசந்தமாளிகை.முதலாம் பருவபரீட்சைமுடிவுற்று இரண்டாம் பருவம் தொடங்கியிருந்த்து. சற்றே இச்சூழலும் பழக்கமாகிவிட்டது. அங்கே தான் இந்தப்படம் பார்த்த ஞாபகம். எந்தப்படம் வெளியானாலும் அதில் தரமான ஒலி ஒளியமைப்போடு இருக்கிறதை எப்படியும் ஒருவாரத்தினுள் தரவிறக்கிதரும் நண்பனொருவன் அறைபாடியாய் வாய்த்திருந்தான் . எங்கள் பல்கலைக்கழகபடவிநியோகஸ்தர்களில் முக்கியமானவன் அவன். அவன் மூலமாய் தான் இப்படமும் எமக்கு வந்த்து. சனிக்கிழமை துயில் எழுதல் நண்பகலை தொட்டுவிடுதும். இது ஆண்கள் விடுதிகளின் வழமை .சாப்பாடு அதன் பின் ஒரு திரைப்படம் வெளி உலாத்தல் என ஒரு நேரசூசி இருக்கும்.இப்படித்தான் 96 ம் பார்க்க நேர்ந்து படம் பார்க்க முதலே முன் பார்த்தவர்களின் அரசல்புரசலான கதைகளும் காதுகளை எட்டியிருந்த்து.படத்தை பார்த்துக்கொண்டிருக்கின்ற போது ஒருவனுக்கு கண்ணீர் வடிகிறது. இன்னொருவனோ குளியலறையில் போய் விம்மி அழுகிறான் அந்தளவு தூரம் திரையில் வருபவற்றை...