இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இராவணனுக்கான போர்

படம்
 இலங்கைத்தீவிலே சிங்களவருக்கும் தமிழர்க்கும் அரசியல் பொருளாதாரம் நிலம் உரிமை என்று தொடர்ந்து வந்த முரண்கள் தற்போது தொன்மம் சார்ந்த விடயங்களிலும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.  நில உரிமையை இல்லாது ஒழிப்பதற்கு இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக வாழும் இனம் இதை கையில் எடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இராவணன் பற்றிய உரிமை கொண்டாடுதல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது . இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகரங்களை வர்ணமயமாக் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ராவணன் படம் முதன்மை நகர்கள் அத்தனையிலும் வரையப்பட்டிருந்தன கண்டி சிகிரியா மாத்தறை தம்புள்ளை போன்ற கலாச்சார நகர்களில் ராவணனின் ஓவியங்கள் பெரும்பான்மைச் சுவர்களை அலங்கரித்து இருக்கின்றன . அதைவிட இருமொழிகளிலும் இராவணன் தொடர்பான தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன . இராவண வம்சம் என்று அடையாளப்படுத்தும் பலரை சமூக ஊடக வெளிகளில் காணமுடிகிறது. தமிழ் மரபில் இராவணன் பற்றிய குறிப்புகளை பலர் கம்பராமாயணம் மூலமே அறிந்து கொண்டிருக்கின்றனர் . அக் காவியத்தின் படி எதிர்நிலை காவியத்தலைவன் இலங்காபுரி ஆண்டவன் அரக்கர் குலத்தவன், சீதையை அபகரித...

கஜலும் நானும்

படம்
  நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் அக்கா  வாசித்துப் பார் என்று தந்த கஜல் கவிதைகள் தொகுப்பு ஒன்றை வீட்டு முடக்க காலத்தில் வாசித்துமுடித்தாகிற்று. பால்யத்தின் எல்லை விளிம்புகளில் நின்று வாசித்த போது வராத அனுபவ உணர்வுகளை இப்போதைய  வாசிப்பு தந்திருக்கிறது . இரண்டு அடிகளைக் கொண்ட கண்ணிகள் ஷேர்் எனப்படும் .இந்த ஷேர் களின் தொகுப்பு கஜல் எனலாம். தமிழுக்கு இந்த வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் அப்துல் ரகுமான் . அவர் கஜல் பற்றி குறிப்பிடும்போது கஜல் அரபியில் அரும்பி பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகிய இலக்கிய வடிவம் என்கிறார் . கயலின் இலக்கணம் கிட்டத்தட்ட குறள் வெண்செந்துறை ஒத்தது.      "ஈரடியான் அளவொத்த இயங்கிடும்            எட்டு சீருள்ளதே குறள்    வெண்செந்துறை"             என தொல்காப்பியம் குறள் வெண்செந்துறை இலக்கணம் கூறுகிறது .ஆனால் கஜலிறகும் வெண்செந்துறைக்கும் வேறுபாடு உண்டு . கஜல் இரண்டு அடிகளில் சம அளவுகளில் எத்தனை சீர...

மாசு

படம்
 எழுதாத கவிதைக்கு  இடவிரும்பிய தலைப்பிது வார்த்தைகள் ஏதும் சுழன்றடிப்பதாய் நானுரவில்லை மார்பையும் விழிப்புருவத்தையும்  கூடலையும் ஊடலையும் நாம் பேசக்காணோம் மையெங்கும் கவிச்சைநாற்றமடிக்க பிறகெங்கே கவிதைவரும் நெருங்குவார கதியில் சதுரங்கபலகையின் கடைசி சிப்பாயோடு நாமிருக்கிறோம் பகைவனோ சீண்டி துவம்சமாக்கிறான் தற்காப்பே வழியென்றாகிறது தடுத்தாலும் குற்றம் எழுந்தாலும் குற்றம் இங்கெப்படி கவிதை வரும் நல்லிணக்கதூதர்முகாமிட்ட தீவொன்றில் காகித இணக்கத்தால் கலைந்துபோகிறது நீளும் காலத்திலாவது சிதைவுகள் கருவாகாது சிதிலமடையா கருவொன்றிறகாய் கவிவரட்டும்

தோழமை காதல்

படம்
 வா விசும்புடை விஞ்சிய பிரியமே விண்ணதிர முரசறைந்து புனல் ஆடி நாம் இருவர் மறையோன் இலா மாண்புறு பெரியோன் வள்ளுவம் உரைக்க வந்தோர் போற்ற வாழ்வினையராவோம் தோள் உரசி  தோழமை பேசி எல்லையில்லா தேசமெங்கும் அலைதலுற்று கூடிக் கிழப்பருவம் எய்தி உடல் விட்டு  முகிலினங்களாய் காதலிப்போம் அங்கும்