இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெட்டுக்கிளிகளும் விவசாய அழிவுகளும்

உலக ஊடகங்களின் பெரும்பரப்பை ஆக்கிரமித்த கொரோனா வைரசின் வீரியம் சற்று குறைந்து வருவது ஆறுதலளிக்கிறது. ஆனாலும் இந்தியாவை நோக்கி பெரும் வெட்டுக்கிளி கூட்டம்  படையெடுக்கிறது என்ற   செய்தி பலரை நடுநடுங்க வைக்கிறது. ஏலவே வீட்டு முடக்கம் காரணமாக ஏராளமான நாடுகள் பொருளாதார வீழ்ச்சி நிலையை கண்டுள்ளது. தொடர்ந்து பஞ்சங்கள் ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளதுள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளினால் ஏற்படப்போகும் அழிவு ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பினால் உற்பத்திகள் அழிக்கப்பட போகின்றது. அண்மைக் காலங்களில் சோமாலியா, எதியோப்பியாவில் தான் வெட்டுக்கிளிகளால் பாரிய அளவு விவசாய நிலங்கள் சேதமாக்கமப்பட்டுள்ளது. பருவப்பெயர்ச்சி போல காலத்திற்கு காலம் இடம்பெயரும் இவற்றைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் உற்பத்தியாளர்கள் தடுமாறி வருகின்றனர். தமிழில் தோன்றிய கரிசல் காட்டு நாவல்களிலும் இந்த வெட்டுக்கிளிகளின் உடைய படையெடுப்பு அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ள தன்மையை காணலாம். கோபல்ல கிராமத்து மக்கள் நாவலை உதாரணமாக குறிப்பிடலாம். தமிழில் வெள...

வேள்பாரியும் நாவல் மரமும்

#வேள்பாரியும் நாவல்மரமும்  சஙக இலக்கியப்பாடல்களில் புதைந்துகிடக்கும் பாரியின் சிறப்புகளை தேடி எடுத்து தன் கற்பனையும் புகுத்தி விரியும் பெரும் நாவலாய் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன். என்னளவில் நாவல் இலக்கியம் காதல் போல் அதன் சுவை நெடிய பாதை வழியே தெவிட்டா ஈர்ப்போடு அழைத்து செல்ல வேண்டும் . ஒவ்வோர் பக்கங்களை புரட்டும் போதும் இதழ் கவ்விய முத்தங்களைப்போல் அதன் சுவை இனிப்பா,துவர்ப்பா,கசப்பா எனத்தூண்டிட வேண்டும். வேள்பாரியின் ஒவ்வோர் பக்கங்களை புரட்டும் போது சில தகவல்கள் ஆச்சரியமூட்டவைத்தன.அவை புனைவாகவே இருக்கட்டும். வேள்பாரி முழுதும் நாவல் மரம் பற்றிய செய்திகள் விரவிக்கிடக்கின்றது.நாவலாசிரியர் குறைந்தது 7,8 வகை நாவற் பழங்கள் பற்றி குறிப்பிடுகிறார்.ஒவ்வோர் நாவலும் தனித்தனி சுவை என சொல்கிறார் பூ நாவல் கொடி நாவல் சிறகு நாவல் நரி நாவல் வெண் நாவல் நீர்நாவல் சிறு நாவல் இவை ஏனோ நாவல் பற்றிய என் தேடலை தொடக்கிவிட்டது.வேறுபட்ட சுவை கொண்ட சுவை கொண்ட நாவல்களை சுவைத்திருக்கிறேன். ஆயினும் அவற்றை இவ்வாறு பெயரிட்டு அழைப்பதை நான் கேட்டதில்லை.வெண் நாவலை தனித்து அடையாளப்படுத்துவதை கண்டிருக்கிறேன். சர...